கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-13

தந்தையின் சூளுரையை நிறைவேற்றிய தனயன்

தஞ்சைப் பேராசின் இளவரசராக ராஜேந்திரன் கி.பி.1012-ம்ஆண்டில் முடிசூட்டப்பட்டார். அப்போது மன்னராக இருந்த ராஜராஜன், இரண்டு ஆண்டுகளில், அதாவது கி.பி.1014-ம் ஆண்டு மரணம் அடைந்தார். ராஜராஜன் எவ்வாறு இறந்தார் என்பதற்கும் அவரது சமாதி அல்லது பள்ளிப்படைக் கோவில் எங்கே இருக்கிறது என்பதற்கும் எந்த உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் கடைசியாகத் தங்கி இருந்தபோது ராஜராஜன் இயற்கை எய்தினார் என்று பலராலும் கூறப்படுகிறது. உடையாளூர் என்பதே சிறிய கிராமம்தான், அங்குள்ள ஒரு சிறிய சந்தில் இருந்து பிரிந்து செல்லும் மிகச் சிறிய பாதையின் ஓரத்தில், யாரும் அதிகம் நடமாடாத இடத்தில் உள்ள ஓர் இடம், ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
விண்ணை எட்டிப் பார்க்கும் வகையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவரும், தமிழகத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவருமான மாமன்னர் ராஜராஜனின் அடக்க ஸ்தலம் இதுதானா என்ற வியப்புக்குரிய வகையில் காட்சியளிக்கும் அந்த இடம், ஓர் அமானுஷ்யமான இடம் போலத் தோற்றம் அளிக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
சிறிது காலத்திற்கு முன்பு, அங்கே ஒரு லிங்கம் சாய்ந்த நிலையில் பூமியில் புதையுண்டு இருந்தது. அதனைச் சுற்றி 4 கம்பங்களை நட்டு, அந்தக் கம்புகளின் மீது ஒரு துணியைக் கட்டி இருந்தார்கள். இப்போது அந்த லிங்கத்தை நேராக வைத்து, அதனைச் சுற்றிலும் சிறிய சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது. (இது ராஜராஜன் சமாதிதானா என்பது குறித்து ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னர் ஆணையிட்டது).
இப்படிப்பட்ட சூழலில், ராஜராஜன் மரணம் தொடர்பாக ஏராளமான கற்பனைக் கதைகள் போட்டிபோட்டு உலா வருகின்றன. அவர், தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்று சிலரும், பெரிய கோவிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டார் என்று சிலரும், இலங்கையில் இருந்து வந்த ஒரு பெண்தான் ராஜராஜன் அகால மரணத்திற்குக் காரணம் என்று சிலரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவை எதுவும் ஏற்கத்தக்கது அல்ல.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
மன்னர் ராஜராஜன், தனது இறுதிக்காலத்தில் மன அமைதிக்காக ஆன்மிகத்தைப் பெரும் அளவில் நாடினார் என்பதும், படிப்டியாக உணவை குறைத்துக் கொண்ட அவர், தனது 67-வது வயதில் இயற்கை எய்தினார் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இளவரசராக இருந்த ராஜேந்திரன், கி.பி.1014-ம் ஆண்டு மன்னராகப் பதவி ஏற்றார் என்றபோதிலும், அவரது ஆட்சி ஆண்டு என்பது, அவர் இளவரசராகப் பொறுப்பு ஏற்ற கி.பி. 1012-ம் ஆண்டில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டு இறுதியில், அதாவது கி.பி.1016-ல் அவரது முதல் மெய்க்கீர்த்தி எழுதப்பட்டது. அந்தச் சாசனத்தில், அவர் முதல் முறையாகத் தனித்துக் களம் கண்ட போரில் வெற்றி பெற்ற இடங்களின் விவரம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
"திருமன்னி வளர இருநிலமடந்தையும் போர்ச் சயப் பாவையும் தன்பெருந் தேவியராகி இன்புற நெடுதுஇயல் ஊழியுள் இடைத்துறைநாடும் தொடர்வன வேலிப் படர்வன வாசியும் கள்ளிசூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும் கண்ணற்கு அருமுரண் மண்ணைக்கடக்கமும் மாபொருதண்டால் கொண்ட கோபரகேசரி பன்பரான ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு"

இந்த மெய்க்கீர்த்தியில், ராஜேந்திரன் வெற்றி கொண்ட நாடுகளாக இடைதுறைநாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக்கடக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளைக் கைப்பற்றுவதற்கான போர், கி.பி.1015-ம் ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்று இருக்க வேண்டும்.
கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History In Tamil, Part-13
ராஜராஜனும், ராஜேந்திரனும் கி.பி.1004-ம் ஆண்டில் படையெடுத்துச் சென்றபோது மேலைச்சாளுக்கிய மன்னராக இருந்த சத்தியாச்சரியன் தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் சாளுக்கியர்களின் தலைநகரமான மண்ணைக்கடக்கம் என்ற மான்யகேடம் கைப்பற்றப்படவில்லை. இது ராஜராஜனுக்கு மிக்க மன வருத்தத்தைக் கொடுத்ததால், 'மண்ணைக்கடக்கம் கைப்பற்றப்படும் வரை கிரிஹர விஹாரம் இல்லை' என்று சபதம் செய்தார்.

தந்தையின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, இளவரசு பட்டம் சூட்டப்பட்டவுடன் ராஜேந்திரன், மேலைச்சாளுக்கியம் மீது படையெடுத்துச் சென்றார். சோழப் படைகள், மண்ணைக்கடக்கம் நோக்கிச் சென்றபோது, வழியில் உள்ள மேலைச்சாளுக்கிய தேசத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளான இடைதுறைநாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை ஆகியவற்றைக் கைப்பற்றின.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
இடைதுறைநாடு என்பது பெங்களூருக்கு நேர் வடக்கே இருக்கிறது. கிருஷ்ணா, துங்கபத்திரை ஆகிய நதிகளுக்கு இடைப்பட்ட இந்த நாட்டை ராஜேந்திரன் முதலாவதாகக் கைப்பற்றினார். அடுத்து ராஜேந்திரன் கைப்பற்றிய வனவாசி என்பது, இடைதுறை நாட்டுக்கு மேற்கே இருக்கிறது. இந்த நாடு பனவாசி என்றும், பனவாசி பன்னீராயிரம் என்றும் அழைக்கப்படுகிறது.
மூன்றாவதாக ராஜேந்திரன் கைப்பற்றிய நாடு கொள்ளிப்பாக்கை. இந்த நாட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்புடன் கூடிய மதில்கள் இருந்ததால் இந்த நாடு, ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில், 'கள்ளிசூழ் கொள்ளிப்பாக்கை' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்காலத்தில் கர்நாடக மாநிலத்தில் 'குல்பர்க்கா' என்று அழைக்கப்படும் பகுதியே முன்காலத்தில் ‘கொள்ளிப்பாக்கை’ என்ற பெயரைப் பெற்று இருந்தது. இந்த நகர், ஐதராபாத்தில் இருந்து 45 மைல் வட கிழக்கே உள்ளது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து ராஜேந்திரனின் படைகள், மேலைச் சாளுக்கிய தலைநகரமான மண்ணைக்கடக்கம் நோக்கிச் சென்றன. மண்ணைக்கடக்கத்தில் உள்ள கோட்டை, எதிரிகளால் ஊடுருவ முடியாத பலத்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்பதால், இந்த நகரம், ‘கண்ணற்கு அருமுரண் மண்ணைக் கடக்கம்’ என்று மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. துங்கபத்திரை ஆற்றிற்கு வட பகுதியில் உள்ள இந்த நகரம் தான் தற்போது 'மால்கெட்' என்று அழைக்கப்படுகின்றது.
ராஜேந்திரன் நடத்திய இந்தப் போரின்போதுதான் சோழப் படைகள் முதல் முறையாக துங்கபத்திரை நதியைக் கடந்து மண்ணைக் கடக்கம் நகருக்குச் சென்றன. மேலைச்சாளுக்கிய மன்னராக இருந்த சத்தியாச்சரியன் கி.பி.1008-ம் ஆண்டில் இறந்துவிட்டார். அவருக்குப்பின் அவரது மருமகன் ஐந்தாம் விக்ரமாதித்தன் அரியணை ஏறினார். அவர் சில ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். அதன்பின் ஜெயசிம்மன் என்பவர் மன்னராகப் பதவி ஏற்று இருந்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
மண்ணைக்கடக்கம் நகரில் சோழப் படைகளுக்கும், சாளுக்கியப் படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. சாளுக்கியப் படைகளுக்கு இடையே சோழப் படைகள் புகுந்து அவர்களை துவம்சம் செய்தன. இந்தக் காட்சியை, கன்னியாகுமரியில் உள்ள கல்வெட்டு வர்ணிக்கும்போது, மண்ணைக்கடக்கம் நகர், சோழப் படைகளுக்கு விளையாட்டு மைதானம் போல இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறது.
இந்தப் போரின்போது, யானை மீது அமர்ந்து போர் செய்த மேலைச்சாளுக்கிய மன்னரைக் கொல்லும்படி தனது படைவீரர் ஒருவருக்கு ராஜேந்திரன் ஆணையிட்டார். திருச்சி மாவட்டம் ஊற்றத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த வீரர் சுருதிமான் நக்கன் சந்திரனான இராசமல்ல முத்தரையன் என்பவர், மேலைச்சாளுக்கிய மன்னர் ஏறி இருந்த குத்திக்கொல்ல யானையைக் ஆவேசத்துடன் பாய்ந்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
அந்த நேரத்தில் அவர், சாளுக்கிய படை வீரன் ஒருவனால் கொல்லப்பட்டார். அவரது வீரமரணத்தைப் பாராட்டும் வகையில், அவரது சொந்த ஊரான ஊற்றத்தூரில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதாக அந்த ஊரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மண்ணைக்கடக்கம் நகரில் நடைபெற்ற போர் காரணமாக அந்த நகரம் சின்னாபின்னமானது.
40 ஆண்டுகளுக்கு முன், ராஷ்டிரகூட ஆட்சி இறுதியில் மாள்வா தேச பரமார ஆட்சியாளர்களால் மண்ணைக்கடக்கம் ஒரு முறை நாசமானது. இப்போது சோழப்படைகளால் அந்த நகரம் மேலும் உருத்தெரியாமல், யாரும் வசிக்கத் தகுதி இல்லாத நகரமாக ஆகிவிட்டது. சோழப் படைகள் அங்கு இருந்து புறப்பட்டுச் சென்ற சில ஆண்டுகளில், சாளுக்கியர்கள் தங்கள் தலைநகரை வட கிழக்கே 48 மைல் தூரத்தில் உள்ள கல்யாண் என்ற கல்யாணபுரத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
மண்ணைக்கடக்கம் நகரை வெற்றிகொண்ட போதிலும் அந்த நகரைத் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மன்னர் ராஜேந்திரன் அறிவிக்கவில்லை. தந்தையின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் மண்ணைக்கடக்கத்தை வெற்றி கொண்டார். சோழப் படைகள் அங்கு இருந்து பொன்னையும், பொருளையும் ஏராளமான வெற்றிச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்குத் திரும்பின.

அதன் பிறகு, இலங்கையில் அடைக்கலமாக வைக்கப்பட்ட பாண்டியர்களின் குலச் சின்னங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற மன்னர் ராஜராஜனின் மற்றொரு சபதத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை மீது ராஜேந்திரன் போர் தொடுத்தார். இந்தப் போர் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook