கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-9

முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்

பிரமாண்டமான ஒரு செயலை அப்பழுக்கு எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதேபோன்ற ஒரு செயலைச் செய்து காட்டக்கூடிய முன் அனுபவம் இருப்பது மிக அவசியம். அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு மன்னன் இராஜேந்திரனுக்கு அவரின் தந்தை மூலமாக உருவானது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
1025-ஆம் ஆண்டு கிங் இராஜேந்திரன் அலைகடல் நடுவே பல கலம் செலுத்தி, 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவிஜயம் (தற்போது இந்தோனேஷியா) நாட்டுக்குச் சென்று, அங்கே யுத்தம் நடத்தி அந்த நாட்டு அரசனைக் கைது செய்த அசாத்தியச் செயலுக்கு முன்னோட்டமாக அமைந்தது, முன்னீர்ப் பழந்தீவு யுத்தம் ஆகும்.
கிங் இராஜராஜன் அவரின் வாழ்நாளில் கடைசியாக (Last) நடத்திய முன்னீர்ப்பழந்தீவில் நடந்த போரில், இராஜேந்திரன் தளபதியாகக் கலந்து கொண்டு சோழ நாட்டு படைக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார். அந்தப் போரில் கிடைத்த அனுபவம் தான், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஸ்ரீவிஜயம் நாடு மீது போர் செய்து வெற்றி பெற்றதற்கு அடித்தளமாக அமைந்தது.

முன்னீர்ப் பழந்தீவில் நடந்த போர் குறித்து எந்த வரலாற்றுப் பக்கங்களிளிலும் விளக்கமான தகவல்கள் (டேட்டா) பதிவாகவில்லை. ஆனாலும் அந்த யுத்தம், இராஜேந்திரனின் திறனை வெளிப்படுத்துவதாக அமைவதால் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தத் தீவு, சோழர்களின் காலத்தில் "முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 12 ஆயிரம் என்பது அங்குள்ள தீவுகளின் எண்ணிக்கை அல்ல.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
அந்தத் தீவின் அரசனாக இருந்தவர், தன்னை 'பன்னீராயிரம் (12 ஆயிரம்) தீவுகளுக்கு அரசன்' என்று சொல்லிக் கொண்டதால், ‘முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' என்ற பெயர் உருவானது. அந்தத் தீவு (Island) கூட்டங்களின் அமைப்பு, பார்ப்பதற்கு மாலை போன்ற தோற்றத்தைக் கொடுத்ததால், பின்னர் அந்தத் தீவு மாலைத் தீவு' என்ற பெயரைப் பெற்று இப்போது ஆங்கிலத்தில் 'மால் டீவ்ஸ்' எனக் குறிப்பிடப்படுகிறது.
நடுக்கடலில் உள்ள அந்தத் தீவுகளுக்கு (Island), அந்தக்காலத்தில் கப்பல்கள் (Ship) மூலமாக மட்டுமே செல்ல முடியும். தமிழர்கள், மிகப் பழங்காலத்திலேயே கப்பல் Ship கட்டும் கலையிலும் (Marine Technology) கடல் பயணத்திலும் (Travel) தேர்ந்தவர்களாக இருந்தனர். ‘நூற்றுவர் கன்னர்' என்று கூறப்பட்ட சாதவாகனர்கள் (B.C 166-193) ஆட்சிக் காலத்திலேயே கப்பல்களின் (Ship) பயன்பாடு அதிகம் இருந்தது.

சாதவாகனர்கள், கப்பல் உருவத்துடன் வெளியிட்ட நாணயங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அவர்களுக்குப் பிறகு வந்த பல்லவர்கள் காலத்திலும் கப்பல்கள் (Ships) அதிக அளவு (Numerous) பயன்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கிங் இராஜராஜன் காலத்தில், மிகப்பெரிய கப்பல் படை உருவாக்கப்பட்டது. கப்பல்கள் (Ships) மூலம் அயல் நாடுகளுக்குப் பயணிக்கும் வணிகர்களுக்குப் பாதுகாப்பு (Safety) கொடுப்பதற்காகவே முதலில் கப்பற்படை உருவாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுப் பொருள்களுக்கு மேற்கத்திய நாடுகளிலும், கீழ்த்திசை நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
மணிக்கிராமத்தார், நானாதேசி திசைஐயாயிரத்து ஐநூற்றுவர், அஞ்சுவண்ணத்தார், ஆயாவோலை, வளஞ்சியர் என்பது போன்ற பல பெயர்களில் இயங்கிய வணிகர்கள் (வியாபாரிகள்), மேற்கே அரேபியா, எகிப்து, பாரசீகம், கிரேக்கம் (Greek) ஆகிய நாடுகளுடனும், கிழக்கே ஸ்ரீவிஜயம் (தற்போது இந்தோனேஷியா), கடாரம் (தற்போது மலேசியா), மியான்மர் (தற்போது பர்மா), கம்போடியா, சீனா, ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்து இருந்தனர்.
அந்தக் காலத்தில் நம் இந்தியாவில் குதிரைகள் வளர்ப்பு இல்லை. வணிகர்கள் (வியாபாரிகள்) மற்றும் பொதுமக்களின் (Public People) அதிவேகப் பயணத்திற்குக் குதிரைகளே (Horse) முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. அனைத்து மன்னர்களும் (Kings) குதிரைப் படையை வைத்து இருந்தனர். இவற்றுக்கான குதிரைகள் (Horses) அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. தமிழகத்தின் மேற்கு (West) பகுதி துறைமுகங்களில் (Harbor) வந்து இறங்கும் குதிரைகள், ஈஸ்ட் பகுதியில் உள்ள துறைமுகங்கள் (ஹார்பர்) வழியாகக் கீழ்த்திசை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

இப்படிப்பட்ட ஏற்றுமதி (Export), இறக்குமதி (Import) காரணமாக காயல்பட்டினம், வீரசோழப்பட்டினம், நாகப்பட்டினம், முசிறி, தொண்டி, மாமல்லபுரம், மயிலாப்பூர், ஆகிய துறைமுகங்கள் (Harbors) பரபரப்பான வணிகச் சந்தைகளாக இயங்கின. இந்தத் துறைமுகங்களில் (Harbor) இருந்து ஏற்றுமதி (Export) செய்யப்படும் பொருள்களுக்கும், இறக்குமதியான (Import) சரக்குகளுக்கும் சுங்க வரி (Tax) வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் குவிந்த நிதி Amount, அரசின் கஜானாவை (Treasury) நிரப்புவதில் பெரும் பங்கு வகித்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
அந்தக் காலத்தில் கடல் பயணம் அரிதானதாகக் கருதப்பட்டது. இதனால் ஒவ்வொரு முறை (Each Time) கடல் பயணத்தின் போதும் வணிகர்கள் (வியாபாரிகள்) விலைமதிக்க முடியாத (Precious) பொருள்களைத் தங்களால் முடிந்த அளவு கப்பலில் (Ship) கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்படும் பொருள்களைக் கொள்ளையடிக்க கடற்கொள்ளையர்கள் உருவானார்கள். வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய இரண்டு கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் இருந்தது.
இவர்களிடமிருந்து தங்களையும், தங்களிடம் உள்ள பொருள்களையும் காப்பாற்றிக்கொள்ள, ஆரம்ப காலத்தில் வணிகர்கள் (வியாபாரிகள்) தங்களுடன் ஆயுதம் ஏந்திய வீரர்களை அழைத்துச் சென்றார்கள். கடற்கொள்ளைகள் (Pirate) அதிகமானதால், கடலில் செல்லும் வணிகர்களை (வியாபாரிகள்) பாதுகாக்கும் வகையில் தனியாகக் கடற்படையை (Navy) அரசாங்கமே உருவாக்கியது.

அப்படி இராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்ட கடற்படை, கடல் பயணம் மேற்கொண்ட வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு, பல யுத்தங்களிலும் முக்கியப் பங்கு வகித்தது. மன்னர் இராஜராஜன், அவரது ஆட்சிக் காலத்தில் மூன்று முறை கடற்படையைப் பயன்படுத்தி போர்களை நடத்தியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
முதலாவது கடற்போர், கி.பி.988-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது கிங் இராஜராஜன் சேர தேசம் மீது தொடுத்த போர் தான், காந்தளூர்ச்சாலைப் போர் என்று வர்ணிக்கப்படுகின்றது. அந்த யுத்தத்தின் போது இராணுவத்தின் ஒரு பகுதியான தரைப்படை (Army), தஞ்சையில் இருந்து பாண்டிய நாடு வழியாகத் தரை வழியாகச் சென்று, சேர நாட்டில் உள்ள காந்தளூர்ச்சாலையை அடைந்தனர்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
ராணுவத்தின் மற்றொரு பிரிவான கடற்படை வீரர்கள், கப்பல்கள் மூலம், கிழக்குக் கடற்கரைவழியாகக் கன்னியாகுமரியைச் சுற்றியபடிப் பயணித்து காந்தளூர்ச்சாலைக்குச் சென்று போரில் கலந்து கொண்டார்கள். அந்தப் போரில் காந்தளுர்ச்சாலை சூறையாடப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது கடற்போர் கி.பி.1001-ஆம் ஆண்டு ஈழத்தைக் கைப்பற்ற நடைபெற்றது.

இந்தப் போரில் இராஜராஜனின் கடற்படை (Navy Force) முக்கியப் பங்கு வகித்தது. ஏராளமான கப்பல்களில் போர் வீரர்கள் (Soldiers) கடல் கடந்து ஸ்ரீலங்கா சென்று வெற்றியைத் தேடித் தந்தனர். மூன்றாம் முறையாக (3rd தடவை) நடந்த கடற்போர், வரலாற்று சரித்திரத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. காரணம், இந்திய வரலாற்றிலேயே மிக அதிக தூரம் (Long Distance) கடலில் பயணித்து நடத்தப்பட்ட முதல் யுத்தம் இதுவே ஆகும்.

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil | Part-9
சேர தேசத்திற்குத் தென் மேற்கே நடுக்கடலில், 1,000 KM (கிலோ மீட்டர்) தொலைவில் முன்னீர்ப் பழந்தீவு 12 ஆயிரம் (மாலத்தீவு) என்ற தீவுக் கூட்டங்கள் (Islands) இருக்கின்றன. தமிழகத்தின் West கடற்கரை துறைமுகங்களிலிருந்து எகிப்து, அரேபியா, பாரசீகம், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் (Ships), இந்தத் தீவுகள் Islandsவழியாகச் செல்லும். அந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களின் (Pirates) அட்டகாசம் அதிகம் இருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், இது பற்றி கிங் இராஜராஜனிடம் முறையிட்டார்கள். Pirates ஒழிக்கும் நோக்கம் காரணமாகவும், மேற்கத்திய Western நாடுகளுடனான வணிகத்திற்கு (Trade) முக்கியக் கேந்திரமாக இருக்கும் அந்தத் தீவுகளை (Islands) தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவது இலாபகரமாக இருக்கும் என்று ஆராய்ந்து இராஜராஜன் தனது கடற்படையை (Navy)அங்கே அனுப்பி வைத்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
தமிழகத்திலிருந்து வெகு தொலைவில் (Long Distance) உள்ள மாலத்தீவை கைப்பற்ற சோழர்களின் கப்பல் படைகள் அணிவகுத்துச் சென்றன. இந்தப் படையெடுப்பிலும் இளவரசர் ராஜேந்திரன் தளபதியாகக் கலந்து கொண்டார். முன்னீர்ப்பழந்தீவுக் கூட்டங்கள், தஞ்சையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக் கடலின் நடுவே இருப்பதால், அந்த அளவு தொலைவுக்குக் கப்பல்களில் பயணித்துப் போர் செய்வது என்பது அந்தக் காலகட்டத்தில் யாருமே நினைத்துப் பார்க்காத ஒன்று.
மன்னன் இராஜராஜன் மிகவும் துணிச்சலுடன், ஏராளமான கப்பல்கள் (Ships) மூலம் முன்னீர்ப் பழந்தீவுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி (Victory) வாகை சூடினார். அங்கிருந்த ஆட்சியாளர்கள் அகற்றி, புதிய ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தினார். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த கடற்கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் இராஜராஜன் அடியோடு ஒழித்தார்.

அதன் பின் வியாபாரிகள் எந்த பயமுமின்றி மேற்கத்திய நாடுகளுக்கு (Western Countries) கப்பலில் சென்று வந்தார்கள். மிகத் தொலைவில் (Very Long Distance) நடுக்கடலில் உள்ள தீவுக் கூட்டத்திற்கு (Islands) கப்பல் படையை அனுப்பி வெற்றிகண்ட இராஜராஜனின் திறமை, வேறு யாராலும் நிறைவேற்ற முடியாத செயல் ஒன்று என்பதால், அந்தத் தீவின் வெற்றி அவரின் மெய்க்கீர்த்தியில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
இப்படி மூன்று முறை (3 Times) நடைபெற்ற கடற் யுத்தங்களிலும், இளவரசராக இருந்த இராஜேந்திரன் முக்கியப் பங்காற்றினார். முன்னீர்ப் பழந்தீவு யுத்தம் போலவே மேலைச்சாளுக்கிய அரசன் சத்யாச்சரியனுடன் நடத்திய யுத்தமும் இராஜராஜனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. அமரர் கல்கி அவர்கள் எழுதிய சிவகாமியின் சபதம் நாவலின் (Novel) முக்கிய கதாபாத்திரம் சத்யாச்சரியன் ஆவார்.
அந்த அரசனின் கொடூர குணம் பற்றி பலரும் அறிந்து இருப்பார்கள். அந்த சத்யாச்சரியன் மன்னன், பல்லவர் காலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரின் வழியில் வந்த மற்றொரு சத்யாச்சரியன், கிங் இராஜராஜன் காலத்தில் மேலைச்சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்தார். அந்த சத்யாச்சரியனுடன், கிங் இராஜராஜனும் இளவரசர் இராஜேந்திரனும் நடத்திய யுத்தம் மிகவும் உக்கிரமானது. நன்றி தொல்லியல் ஆய்வாளர் அமுதன் அவர்களுக்கு!

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook