Best Tamil Motivational Stories | நம்பிக்கையுடன் செயல்பட | ThaenMittai Stories

Motivational Lines in Tamil

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் தொட்டு விடலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப பயிற்சி செய்து நன்கு கற்று கொள்ளுதல் வேண்டும். அதன் முடிவுகளை அளந்து முன்னேற்றங்களையும், தோல்விகளையும் அலசி ஆராய்ந்து முன்னேற்றத்திற்கு உண்டான முயற்சிகளை செய்ய வேண்டும். செயல்துறை வல்லுனர்களின் நட்பை பெற்று அவர்களின் ஆலோசனைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செயல்களில் புது புது யுக்திகளையும், நுணுக்கங்களையும் அவ்வப்போது முயற்சி செய்து செயலில் முன்னேற்றத்தை பார்க்க வேண்டும். செயலில் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றச் செயல் முறைகளை (best practices) செய்து பார்க்க வேண்டும்.
படைப்பின் நோக்கத்தை அறிய முயலும் எளிய வழி, தன்னிடமுள்ள பலம், பலவீனத்தை பட்டியலிட்டு, பலவீனத்தை பலப்படுத்தவும், பலத்தை வீரியப் படுத்தவும் முயற்சித்து இரண்டுக்கும் உகந்த ஒரு களத்தை கண்டறிதல் வேண்டும். அதில் தயக்கம், பயம் ஏதுமின்றி பயணிக்க வேண்டும். தன்னம்பிக்கை தான் வெற்றியை கொடுக்கும் அது ஒவ்வொரு அணுவிலும் ஊறியிருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பயம், தயக்கம் இரண்டுமே, தன்னம்பிக்கையின் எதிரிகள். இவை இரண்டையும் புறக்கணித்து செயல்படும் போது தன்னம்பிக்கை தானாகவே அதிகரிக்கும்.
நம்மையும், நம் மனதையும் அழிக்காமலும் மெருகேற்றவும் பயன்படுவது தான் தன்னம்பிக்கை. யார் நமக்கு துரோகம் செய்வார்கள், யார் நம்மை பழிவாங்க நினைப்பார்கள், யார் நம்மை கீழே தள்ளி விடுவார்கள், யார் நம்மை அவமதிப்பார்கள் மற்றும் யார் நமக்கு பாதுகாப்பளிப்பார்கள் என்றெல்லாம் நமக்கு அச்சம் ஏற்படும் தருணத்திலும் நமக்கு உறுதுணையாக இருப்பது நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையே ஆகும். தன்னம்பிக்கை என்பது நம் வாழ்வில் இல்லையென்றால் நம்மால் தன்னிறைவை என்பதை காணமுடியாது மற்றும் தன்னம்பிக்கை இல்லாமல் வெறுமனமே உழைத்தால் நம்மால் ஒருநாளும் வெற்றிக்கனியை பறிக்க முடியாது. ஆகையால், நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்; வாழ்வில் வெற்றி பெற நம்பிக்கையுடன் கூடிய உழைப்பு வேண்டும்.

நம் வாழ்வில் எந்த ஒரு செயலை செய்தாலும் ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். எதையும் செய்ய துடிக்கும் ஒரு வேட்கை இருக்க வேண்டும். வேட்கை இல்லாத செயல்கள் எதுவுமே நிறைவேறாத செயல் ஆகி விடுகிறது. வாழ்க்கையில் இலட்சியம் தான் ஒரு மனிதனுக்கு முதல் தேவையாக இருக்க வேண்டும். இலட்சியம் இல்லாத, இலட்சியத்தை அடைய வேகம் இல்லாத, துடிப்பு இல்லாத எந்த ஒரு செயலையும் நம்மால் எட்டிப் பிடிப்பது என்பது மிக கடினமான காரியம் ஆகும். வாழும் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமெனில் நிச்சயம் நமக்கு ஓர் லட்சியம் இருக்க வேண்டும்.
நாம் எண்ணிய குறிக்கோளை அடைவதற்கு நமக்கு திண்ணிய நெஞ்சம் வேண்டும். துணிவுடன் போராட வேண்டும். துணிவுடன் போராடும் போது வெற்றி எனும் கனியை நம்மால் ருசிக்க முடியும். இலட்சியம் என்று ஒன்று இருந்தால் தான் நம்முடைய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். வாழ்க்கையில் தேடல் என்பது இருக்க வேண்டும். தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி நிற்கும் குட்டை நீர் போல் ஆகிவிடும். நாம் வாழ்க்கையில் இலட்சிய பாதையினை நோக்கிப் பயணிக்கும் போது "கொக்குக்கு ஒன்றே மதி" என்பது போல் நமது சிந்தனைகள், செயல்கள் யாவும் குறிக்கோளை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும். முதலில் நம்முடைய இலக்கு என்ன என்பதை தீர்மானித்து கொண்டு, வெற்றி பெறுவதற்கான வழிகளை வகுத்து செயல்பட வேண்டும். உயர்ந்த லட்சியத்திற்காக பாடுப்பட்டு உழைத்து வெற்றி காணும் போது இந்த உலகமே தலையில் வைத்து போற்றிக் கொண்டாடும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் தேடல் என்பது மிக அவசியம். ஒவ்வொரு தேடலும் மனிதனுக்கு தேவையாகிறது. அப்படி தேவையறிந்து உருவாக்கப்பட்ட கைபேசியில் தான் இந்த உலகத்தில் நடக்கிற அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பார்க்க முடிகிறது. தேடல் என்பது ஒன்று இருப்பதால் தான் மனிதன் தேடுப்பொறியில் அதாவது கூகுளில் (GOOGLE Search Engine) தேடுகிறார்கள். அப்படிப்பட்ட கூகுளையே (Google) கண்டுபிடித்தது தேடலால் தான். தோல்வி அடைந்த பாதையில் ஆழ்ந்து தேடும் போது வெற்றி அடைவதற்கான சாவியை காணமுடிகிறது.

ஆகையால் தோல்வி அடைந்தாலும் வெற்றி எனும் இலக்கை அடைய மீண்டு(ம்) மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். எத்தனை இன்னல்கள் வந்தாலும் உன் தேடலை நிறுத்திவிடாதே!. உன்னுடைய தேடல்களால் தான் வெற்றிக்கான பல சாவிகளை கண்டுபிடிக்க முடிகிறது. பல சாவிகள் சேர்ந்தது தான் ஒரு சாவிக்கொத்து!. அது தான் உன் கெத்து என்பதை மறந்து விடாதே! உன்னிடம் இருக்கும் இந்த சாவிகளில் எது சரியான சாவி, அந்த கடினமான கதவுகளை திறப்பதற்கு என்று அறிந்து செயல்பட்டால் உன்னால் பல கதவுகளை திறக்க முடியும்.
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் மன தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும். சிலர் எதற்கு எடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள், நம்மால் இந்த செயலை சரியாக செய்ய முடியுமா? என்று எண்ணிக் கொண்டு அதை செய்யத் தயங்குவார்கள். எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்த விஷயத்தையும் உங்களால் செய்ய முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். முயற்சி செய்யமால் எதையுமே சாதிக்க முடியாது. பயந்து கொண்டே இருந்தால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. வாழ்க்கையில் வெற்றியும் அடைய முடியாது. தன்னம்பிக்கையோடு எந்த ஒரு செயலையும் எதிர்க்கொண்டு செய்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். நாம் நினைத்தால் இந்த உலகத்தையே ஜெயிக்கலாம். விதைத்துக் கொண்டே இரு!. முளைத்தால் மரம் ஆகட்டும்; இல்லையேல் உரம் ஆகட்டும்.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)