Real Stories In Tamil | Motivational Success Stories In Tamil | ThaenMittai Stories

Real Motivational Success Stories in Tamil

தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு தன் மீதும் மற்றும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும். தன்னம்பிக்கை கொண்டு சாதித்த மனிதர்களின் வரலாறே உலக சரித்திரமாகும் என்றார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் மட்டுமே நாம் வாழ்வில் வரக்கூடிய சவால்களை சமாளித்து வெற்றி நிலையை அடைய முடியும். சாதித்த மனிதர்களின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அவர்களின் மாபெரும் சாதனைகள் அனைத்தும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பது புரிய வரும்.

ஒரு மனிதனின் கடின உழைப்பு, விரைவாக கற்றுக் கொள்ளும் திறன், விடாமுயற்சி, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் சொல்லலாம். ஆனால் இவை எல்லாமே 'தன்னம்பிக்கை' எனும் ஓர் அடித்தளத்தில் இருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்று கூறுகிறார்கள் அறிஞர்கள். மனிதன் தன் வாழ்வில் புதிதாக ஒரு செயலை செய்ய ஆர்வம் கொள்ளவும், அச்செயலை மனம் தளராது விடாமுயற்சியின் மூலம் மேற்கொள்ளவும் தன்னம்பிக்கை உதவுகின்றது.
தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி ஆகும். அது நாம் வாழ்வதற்கும், வாழ்வில் நம்மை உயர்த்துவதற்கும் வழிவகைகளை உருவாக்கிறது என்றால் நிதர்சன உண்மை. தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை, தோல்வியால் துவண்டு போவதில்லை - அவர்களுடைய தன்னம்பிக்கை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு வழிகாட்டியாக அமைகிறது. தோல்வியானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று தான் பொருள் கொள்ள வேண்டும். தோல்வி தான் வெற்றியின் முதல் படி ஆகும். ஆகையால் தோல்வி எனும் முதற்படியில் ஏறி தோல்வியை தோற்கடிப்போம்!.
எந்த துறையில் சாதிக்க விரும்புகிறோமோ, அதற்கான அனைத்து தகுதிகளையும் நாம் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கைகளே இல்லாதவனுக்கும் தன்னம்பிக்கை உண்டு. சாதனைகள் பல புரிய சோர்வும், சோம்பலும் இருக்கவே கூடாது. கடின உழைப்புடன் கூடிய ஸ்மார்ட் உழைப்பும், எதையும் இடைவிடாத முயற்சியும் தேவை. எந்த செயலையும் மிக தெளிந்த சிந்தனையுடனும், மிக நேர்த்தியாகவும், விரைவாகவும், அதே சமயத்தில் மிக எளிதாகவும் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோல்வி இருந்து விரைவாக பாடம் கற்றுக் கொண்டு ஜெயித்து விட வேண்டும் என்ற துணிவை வளர்த்துக் கொண்டு செயல்படுகிறான். தன்னம்பிக்கை உள்ள மனிதன் எதையும் சாதிப்பான். எனவே தன்னம்பிக்கை எனும் விதையை மனதில் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது வெற்றிக்கான வழிகளை உருவாக்கி கொடுக்கும் என்றால் மிகையாகாது.

தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, சோம்பேறித்தனம், மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், மற்றவர்களோடு கலகலப்பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும். உங்கள் பலம், பலவீனம் இவைகளைச் சரியாகப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். உங்கள் வாய்ப்புகளையும் அவைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளையும் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நீங்கள் பட்டியலிட்டுள்ள பலவீனங்களில் சிலவும், தடைகளில் சிலவும் உண்மையிலேயே பலவீனமோ அல்லது தடையோ அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். எஞ்சியுள்ள பலவீனங்களையும், தடைகளையும் வெல்வதற்குண்டான முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கி செயல்பட வேண்டும்.
தன்னம்பிக்கை என்ற ஒன்று நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானதாகும். திறமை என்ற ஒன்றினால் மட்டுமே அனைத்து காரியங்களும் செய்துவிட முடியாது. நம் திறமையுடன் கூடிய நம்பிக்கையால் நம்மால் செய்துவிட முடியும் என்று நம்புவதே தன்னம்பிக்கை ஆகும். வெற்றி பெறுவதற்கு, நினைத்த இலட்சியத்தை அடைவதற்கு நம்மிடம் இருக்கும் பலங்களையும், வாய்ப்புகளையும் தன்னம்பிக்கையுடன் சேர்த்து செயல்பட வேண்டும். நம்மிடம் இருக்கும் பலத்தைக் கூட்டியும் , பலவீனத்தைக் கழித்தும், வாய்ப்பினைப் பெருக்கியும், தடைகளை வகுத்தும் செயல்படும் போது தன்னம்பிக்கை தானாக வளரும். பலவீனங்களைக் குறைத்துத் தடைகளைத் தகர்க்கும் போது நம்மிடம் இருக்கும் பலங்களும், வாய்ப்புகளும் தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகரிக்க செய்கிறது. தன்னம்பிக்கை இருந்தால் எந்த துறையிலும் தடம் பதித்து சாதிக்க முடியும்!.

சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் பயந்து துவண்டு விழாமல் எதிர்த்து நின்று போராடினால் தான் அந்த சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு கூட தீர்வு காண முடியும். பிரச்சனை இல்லாத மனிதன் யாரென்று கூறுங்கள் பார்ப்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனை உண்டு. அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகள் ஏராளம். அந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு கையாள்வது ஒரு கலை என்று கூட சொல்லலாம். ஏனென்றால் பிரச்சனைகள் வரும் போது தான் அவன் அவற்றை எப்படி சமாளித்து தீர்வு காண்பது என்று பல வழிகளை தேடிச் செல்கிறான். எப்படி பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது என்ற பாடத்தை கற்றுக் கொள்கிறான். இதே மாதிரி பிரச்சனைகள் அடுத்து நிகழாதவாறு தான் சந்தித்தப் பிரச்சனைகளிலிருந்து அனுபவத்தை பெற்றுக் கொள்கிறான்.
உலக நாடுகளில் பல்வேறு துறைகள் உள்ளன. கலை, வணிகம், கணினி, கல்வி, சினிமா, சுகாதாரம், செய்தி and ஊடகம், அரசியல், நிதி, நீதி, பாதுகாப்பு துறை, இசை, விளையாட்டு, அறிவியல், ஷாப்பிங், சமூகம் என பல்வேறுபட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைகளிலும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல மனிதர்கள் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். தற்போதும் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களிலும் நிகழ்த்தி கொண்டிருப்பார்கள். சாதனை படைத்த மனிதர்களை படித்துக் கொண்டே இருந்தால் மட்டும் நாம் சாதனை மனிதர்களாக உருவாக முடியாது. அவர்கள் கூறிய நல்ல கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டிய செயல்களை செவ்வெனே செய்திடல் வேண்டும். மாற்றத்திற்கான பாதை தான் முன்னேற்றம்!. சின்னச் சின்ன மாற்றங்கள் தான் மிகப்பெரிய முன்னேற்றம் தரும் என்றால் மிகையாகாது. நன்றி வணக்கம்.!!

Related Tags

Real Life Motivational Stories In Tamil | Positive Stories In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)