கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-22

கீழ்த்திசை நாட்டின் சூழ்ச்சி

10 மற்றும் 11-ம் நூற்றாண்டில், கடல் வழியிலான வர்த்தகத்தின் முக்கியக் கேந்திரமாக சீனா விளங்கியது. அந்தக் காலகட்டத்தில், ஒரு நாட்டின் படை பலத்தைக் கொண்டே அந்த நாட்டின் வணிகர்களுக்கும், தூதுக் குழுவினருக்கும் கவுரவம் அளிக்கும் வழக்கம் சீனாவில் இருந்தது. கிரேக்கம், அரபு தேசம் மற்றும் ஸ்ரீ விஜய நாட்டு வணிகர்களுக்கு சீன அரசின் கவுரவமும், சலுகைகளும் கிடைத்தன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
சோழ தேசத்தில் இருந்து அதிக அளவு வணிகர்கள் சீனாவுக்குச் சென்றபோதிலும், அவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கவில்லை. “சோழ நாடு மிகவும் சிறிய அரசைக் கொண்டது. அது எங்கள் அடிமை நாடு. எங்களுக்குக் கப்பம் செலுத்தும் சிற்றரசர்களே சோழ மன்னர்கள், அந்த நாட்டு வணிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை” என்று சீன அரசிடம் ஸ்ரீவிஜய அரசு பொய்ப் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதே இதற்குக் காரணம்.
ஸ்ரீவிஜய அரசின் இந்தப் பிரசாரத்தால், சீனாவுக்குச் செல்லும் சோழ வணிகர்கள் உதாசீனப்படுத்தப்பட்டனர். சீனாவில் இருந்து திரும்பிய சோழ வணிகர்கள், இந்தத் தகவல்களை அப்போது சோழ தேச மன்னராக இருந்த ராஜராஜனிடம் தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து மன்னர் ராஜராஜன் 1013-ம் ஆண்டு 52 பேர் அடங்கிய தூதுக் குழுவை சீனாவுக்கு அனுப்பினார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
அந்தக் குழுவினர் சீனாவுக்குச் செல்லும் வழியில், ஸ்ரீவிஜய நாட்டில் சில மாதங்கள் தங்கி அந்த நாட்டை நோட்டம் விட்டனர். 1015-ம் ஆண்டு அவர்கள் சீனாவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இதற்கிடையே 1014-ம் ஆண்டு, தஞ்சையில் இருந்த மன்னர் ராஜராஜன், மரணம் அடைந்துவிட்டார். இந்தத் தகவல் சீனாவுக்குச் சென்று இருந்த சோழர்களின் தூதுக் குழுவுக்குத் தெரியாது.
சோழ தேசத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், அந்தத் தூதுக் குழுவிடம் சீன மன்னருக்குக் கொடுப்பதற்காக முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள குல்லாய், 60 யானைத் தந்தங்கள் மற்றும் ஏராளமான பரிசுப் பொருள்களை ராஜராஜன் கொடுத்து அனுப்பி இருந்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
அத்துடன் அவர், சீன மன்னருக்கு எழுதிய கடிதத்தில், "எனது வயதும், நீண்டகாலப் பயணமும் நான் நேரில் வருவதற்குத் தடையாக இருக்கின்றன. நானே நேரிடையாக பரிசுப் பொருட்களைக் கொண்டுவர விரும்பினேன். நான் அனுப்பிய 52 தூதர்கள் எனது சார்பில் அவற்றைத் தங்களிடம் வழங்குவார்கள். முத்துக்கள் பதித்த மேலதிக தொப்பி, 21 ஆயிரம் லியாங் எடையுள்ள பல வகை முத்துக்கள், 60 யானைத் தந்தங்கள், 60 பவுண்டு நறுமணத் திரவியங்கள் ஆகியவற்றை அனுப்பி இருக்கிறேன். அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தப் பரிசுகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், ஸ்ரீவிஜய அரசின் பொய்ப் பிரசாரம் காரணமாகச் சோழ வணிகர்களுக்குச் சீனாவில் தகுந்த கவுரவம் வழங்கப்படாத நிலையே நீடித்தது. அவர்கள் சீனாவில் வர்த்தக உரிமை பெறுவதிலும் பெரும் சிக்கல் தொடர்ந்தது. இந்தத் தகவல்கள், ராஜராஜன் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர் ராஜேந்திரனுக்குத் தெரிவிக்கப்பட்டன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
இதற்கிடையே, கீழ்த்திசை நாடுகளில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. தங்களுக்கு ஸ்ரீவிஜய அரசின் அடுத்த ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்பதில் இரண்டு இளவரசர்களுக்கு இடையே போட்டி உருவானது. அந்த இரண்டு இளவரசர்களும், ஆதரவாகப் பணத்தைத் திரட்ட, கடல் கொள்ளையர்களின் உதவியை நாடினார்கள். இதனால், அந்த நாட்டுக் கடல் பகுதியில் கடல் கொள்ளை அதிகரித்தது.
இத்துடன், தமிழகத்தில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் சீனாவுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் அனைத்தும் தங்கள் நாட்டுத் துறைமுகத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவிஜய அரசு வற்புறுத்தத் தொடங்கியது. அவ்வாறு அந்த நாட்டுத் துறைமுகத்தில் நிற்காமல் சென்ற வணிகக் கப்பல்கள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் முதலாம் சூர்யவர்மன் என்ற மன்னர் ஆட்சிக்கு வந்தார். அவர் கம்போடியாவை ஒருங்கிணைப்பதற்காகப் பக்கத்தில் உள்ள பகுதிகளைத் தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டார். கம்போடியாவின் இந்த வளர்ச்சி ஸ்ரீவிஐய அரசுக்குப் பிடிக்கவில்லை.
அந்தச் சமயம் மலாயா தீபகற்பப் பகுதியில் ஆட்சி செய்த தாம்ப்ரலிங்கா என்ற ஆட்சியாளர்களால் கம்போடியா மன்னர் சூர்யவர்மனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. கம்போடியா மன்னர் சூர்யவர்மன், சோழ மன்னர் ராஜேந்திரனுடன் நட்பு கொண்டவர். சிதம்பரம் நடராஜர் கோவில் சுவரில் வைப்பதற்கு சிறப்பு வாய்ந்த கருங்கல் ஒன்றை, மன்னர் ராஜேந்திரனுக்கு சூர்யவர்மன் 1014-ம் ஆண்டு அனுப்பி வைத்து இருந்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
போர்க்களங்களில் தான் பயன்படுத்திய தேர் ஒன்றையும், சில ஆண்டுகள் கழித்து மன்னர் ராஜேந்திரனுக்கு சூர்யவர்மன் பரிசாக அனுப்பினார். தற்போது தனது ஆட்சிக்கு தாம்ப்ரலிங்கா மற்றும் ஸ்ரீவிஜய நாட்டு ஆட்சியாளர்களால் ஆபத்து ஏற்பட்டு இருப்பதால், அவர்களுக்கு எதிரான போரில் உதவி செய்யும்படி ராஜேந்திரனிடம் சூர்யவர்மன் கேட்டுக் கொண்டார்.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil, Part-22
சோழ வணிகர்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீவிஜய அரசு தொடர்ந்ததாலும், கம்போடியா அரசுக்கு உதவ வேண்டும் என்பதாலும், ஸ்ரீவிஜய நாட்டுக்குப் பாடம் புகட்ட மன்னர் ராஜேந்திரன் தீர்மானித்தார். இது குறித்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர் ராஜேந்திரன், ஸ்ரீவிஜய நாடு மீது தாக்குதல் நடத்துவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்.

ஏற்கனவே ஸ்ரீவிஜயாவில் சில மாதங்கள் தங்கி நோட்டமிட்ட படைகளிடம், அந்த நாட்டு நிலவரத்தை மன்னர் ராஜேந்திரன் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து 1017-ம் ஆண்டு சோழப் படைகள் ஸ்ரீவிஜய நாடு மீது சிறிய அளவிலான தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் இந்தத் தாக்குதல் பற்றிய விவரம் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. சோழப் படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவிஜய அரசு, 1016 முதல் 1028 வரை சீனாவுக்கு தூதுக்குழு எதையும் அனுப்பவில்லை என்பது மட்டும் தெரிகிறது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
1020-ம் ஆண்டு சோழர்களின் மற்றொரு தூதுக் குழு சீனாவுக்குச் சென்றது. அந்தத் தூதுக் குழு, குவாங்சூ நகருக்குச் சென்றதும் தூதுக் குழுவின் தலைவர் திடீர் என்று மரணம் அடைந்தார். இந்த மரணத்திற்கு ஸ்ரீவிஜய ஆட்சியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாடும் எழுந்தது. ஸ்ரீவிஜய நாட்டு அரசால் உருவாகும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நினைத்த மன்னர் ராஜேந்திரன்.
மன்னர் ராஜேந்திரன், அந்த நாடு மீது 1025-ம் ஆண்டு மிகப் பெரிய தாக்குதலைத் தொடுத்தார். மன்னர் ராஜேந்திரன் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கடாரம் படையெடுப்பில், வியப்பான பல செய்திகள் அடங்கிக் கிடக்கின்றன. இந்தப் படையெடுப்புக்கு மன்னர் ராஜேந்திரன் பயன்படுத்திய யுக்தி, நவீன கால போர்த் தந்திரங்களுக்குச் சவால்விடும் வகையில் இருந்தது. அந்த அதிசயத் தகவலை விரிவாகக் காணலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7

ராஜேந்திரனின் கப்பல் படைக்கு மத்திய அரசின் கவுரவம்

சோழர்களின் கடற்படை சிறப்பு காரணமாக, ராஜேந்திர சோழன் மன்னராகப் பதவி ஏற்ற நிகழ்ச்சியின் 1000-வது ஆண்டையொட்டி, கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசு சிறப்பான விழாவை நடத்தியது. ஐ.என்.எஸ். சுதர்ஷினி என்ற போர்ப் பயிற்சிக் கப்பல், நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, ராஜேந்திர சோழன் புகழைச் சுமந்தபடி, கீழ்த்திசை நாடுகளுக்கு அவர் பயணித்த கடல் பாதையைச் சுற்றி வந்தது.
2015-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி, ராஜேந்திர சோழன் மற்றும் சோழர்களின் போர்க் கப்பல் ஆகிய உருவப் படங்களுடன் சிறப்புத் தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. அதே ஆண்டு, மராட்டிய மாநிலத்தில் உள்ள மஸ்கான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், ராஜேந்திர சோழனின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
கப்பல் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கப்பலுக்கு, ராஜேந்திரன் பெயரை மத்திய அரசு சூட்டியது. இந்தக் கப்பலில் 1972 முதல் 1993 வரை ஏராளமான வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மன்னர் ராஜேந்திரன் உருவப்படத்துடன் கூடிய தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டது. தமிழக அரசும் தனது பங்கிற்கு, மன்னர் ராஜேந்திர சோழனைச் சிறப்பிக்கும் வகையில், 2022-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு சார்பாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து உள்ளது.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook