வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

வெப்ப அலையை எதிர் கொள்வது எப்படி?

'அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்துவிட்டன. இன்னும் அச்சுறுத்தும் வகையில் வெப்ப அலையும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெப்ப அலை என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

வெப்ப அலை ஏன் ஏற்படுகிறது?

வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து காற்றை அழுத்தி தள்ளும் செயல்முறை நடக்கும். அப்படி காற்று ஒரே பகுதியில் குவிந்து காற்றழுத்தம் அதிகரிக்கும்போது மேகங்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படும். வானம் நீல நிறத்தில் தெளிவாக காணப்படும். அப்போது வானின் மேற்பரப்பில் வெப்பம் பரவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி காற்றின் வடிவங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் குறிப்பிட்ட பகுதிக்கு வெப்பமான காற்றை கொண்டு வரக்கூடும். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையும் இணைந்து வெப்ப அலைக்கு வித்திடுகின்றன.

எங்கு வெப்பநிலை அதிகமாகும்?

பொதுவாகவே இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்ப நிலை அதிகரிக்க தொடங்கும். இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலுங் கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

வெப்ப அலை என்றால் என்ன?

பொதுவாக இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் கோடை காலங்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை விட கூடுதலாக வெப்ப நிலை உயருவதைத்தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக வெப்ப அலை மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஏற்படும். சில சமயம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இயல்பாக இருக்கும் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அதனை வெப்ப அலை என்று வரையறை செய்கிறார்கள். அதிலும் சமவெளி பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸுக்கு கூடுதலாகவும் வெப்பநிலை உயர்ந்தால் அங்கு வெப்ப அலை வீசுவதாக கணக்கிடப்படுகிறது.

எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது நீரிழப்பு, சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப் பிடிப்பு, வியர்வை, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகும். அதனால் மயக்கம்,வலிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கோமா நிலைக்கு தள்ளப்படலாம். வெப்ப அலைகள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவை அதிகப்படுத்தும். அதனை ஈடு செய்ய போதுமான திரவ நிலை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

Read Also: மென்திறன் அறிவும், அவசியமும்
வெப்ப அலையை எதிர்கொள்வது  எப்படி?

வெப்ப அலை வீசும் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் அருந்திக்கொண்டிருக்க வேண்டும். பருகும் தண்ணீர் அறை வெப்பநிலைக்குள்ளாகவே இருக்க வேண்டும். குறிப்பாக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் பருகுவதை தவிர்க்கவும். அதிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் நிலையில் இருந்தால் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனை பருகுவது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடனே. கை, கால்களை கழுவக்கூடாது. அறை வெப்பநிலைக்கு உடல் தன்னை தயார் செய்த பிறகு அல்லது அரை மணி நேரம் கழித்து கை, கால்களை கழுவவோ, குளிக்கவோ செய்யலாம்.

Read Also: தாழ்வு மனப்பான்மை நீங்க நடிகர் சூர்யாவின் நிஜ வாழ்க்கை பதிவு
வெப்பம் அதிகம் நிலவும் வேளையில் சோர்வாக இருந்தால், உடனடியாக குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்புகள், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். பக்கவாதத்திற்கும் வித்திடும்.

வெப்பம் அதிகம் நிலவும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.

Read Also: Information For Entrepreneurs In Tamil, தொழில் முனைவோர்க்கான தகவல்கள்
உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் குளிரூட்டப் பட்ட அறை, நூலகம் மற்றும் உயர மான அடுக்குமாடி கட்டிடங்களில் நேரத்தை செலவிடலாம். தினமும் இருமுறை குளியல் போடலாம்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook