Kutty Motivational Story In Tamil | வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்

வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்

ஒரு ஊரில் ஒரு அழகான இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதே ஊரில் இருக்கிற ஒரு விவசாயியின் மகளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். ஆகையால் இதை பற்றி அந்தப் பெண்ணின் தந்தையிடம் பேசி முடிவு பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டு அவரைப் போய்ப் பார்க்கிறான். அதற்கு அந்த விவசாயி இளைஞனை பார்த்து சொல்கிறார் நீ என்னுடைய மகளை திருமண செய்துக் கொள்ள விரும்பினால், நான் வளர்க்கும் 3 காளையினை உனக்கு அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒரு காளையின் வாலை நீ தொட்டால் கூட போதும் என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவதற்கு சம்மதிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அவனும் ஒப்புக் கொள்கிறான்.

Kutty Motivational Story In Tamil, வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள்
தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளை மாடுயினை ஒன்று ஒன்றாக அவிழ்த்து விட்டார். முதலில் ஒரு காளை மாடு வந்தது. அது பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமாக தோற்றம் கொண்ட அந்த காளை சீறியபடி பாய்ந்து வந்தது. அதை பார்த்த இளைஞன் வாலை பிடிப்பதற்கு கொஞ்சம் தயங்கி அடுத்த காளையினை பிடிக்கலாம் என்று நினைத்து விட்டு விடுகிறான். கொஞ்ச நேரத்தில் அதைவிட பெரிய காளைமாடு ஒன்று ஓடி வந்தது. அது பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

அதன் தோற்றத்தினை பார்த்து ரொம்ப பயப்படுகிறான் அந்த அளவுக்கு மிரட்டலாக இருந்தது. அவனை வந்து முட்டி மோதி கொல்கிற மாதிரி அந்த காளை மாடு பயங்கரமான கோபத்தோட ஓடி வந்தது. இதை பார்த்த அந்த இளைஞன் மறுபடியும் பயந்து போய் ‘அய்யய்யோ’ இது ரொம்ப ஆபத்தான நிலையை உருவாக்கிவிடும் போல என்று நினைத்து இதுவும் வேண்டாம் என்று விட்டு விட்டான். மூன்றாவதாக வரும் காளை மாடுயினை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுகிறான்.
தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாவது காளை மாடுயினை கதவு திறந்து அனுப்பினார்கள். அந்த காளைமாடு வெளியில் வந்தது, வெளியில் வந்த காளை மாடுயினை பார்த்து - அந்த இளைஞனுக்கு முகத்தில் ஒரு சிரிப்பு கலந்த சந்தோஷம் வருகிறது. ஏனென்றால் வெளியே வந்த அந்த காளை மாடு பார்ப்பதற்கே ரொம்ப பலவீனமாக இருக்கிறது. எலும்பும் தோலுமாக இருக்கிறது பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்துட்டு இருந்தது.


அவன் நினைக்கிறான் இந்த மாட்டை விட்டு விடக்கூடாது கண்டிப்பாக பிடிக்க வேண்டும். இதை காளை மாட்டை பிடித்தால் தான் நான் நினைத்தப்படி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தயாராக இருந்தான். காளை மாடு அருகில் வந்தது. ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு தாவித்தாவி அந்த மாட்டோட வாலைத் தொடப் பார்த்தான். ஆனால் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அது என்னவென்றால், அந்த காளை மாட்டுக்கு வாலே கிடையாது.
எல்லா வாய்ப்புகளையும் இழந்து கடைசியாக வாலில்லாத மாட்டுக்கு முயற்சி செய்து அந்த வாய்ப்பினையும் இழந்து விட்டார். ஏனென்றால் வெளியே வந்த அந்த காளை மாட்டுக்கு வாலே கிடையாது. நமது வாழ்க்கையும் இப்படித்தான், வாழ்க்கை நமக்கு பல வாய்ப்புகளை கொடுத்தும் கூட நாம் இந்த வாய்ப்பை நழுவ விட்டு அடுத்து வருவதை பார்த்துக்கொள்ளலாம் என ஒவ்வொரு வாய்ப்பையும் இழந்து விடுகிறோம். கடைசியில் நமக்கு எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லையே என்று புலம்புவதை விட கிடைக்கும் தருணங்களில் ஏற்படும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால் நாம் வெற்றி அடைவது நிச்சயமே!.

நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. சில வாய்ப்புகள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது எல்லாம் கடுமையாக உள்ளது என்று நம்பி கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டால் (அதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும்) அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது. ஆகவே, வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. நிறைய சந்தர்பங்கள் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அமைவது இல்லை. நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அன்று நமக்குக் கிடைக்கும் இனிய பழத்தைப் போன்றது தான். பழம் கெட்டுப் போவதற்கு முன் நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் பழம் அழுகிப் போய்விடும்; அது பயன் தராது.

அதுபோல் இன்றைய தினத்தை நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ பயன்படுத்திக் கொள்ள முடியாது. வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான். உதாரணமாக ஒரு வாழையின் இலை, தண்டு, மட்டை, சருகு, பூ, காய், கனி என அத்தனையும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்வதைப் போல் வெற்றிபெற்ற மனிதர்கள் ஒரு நாளில் காலை, பகல், மாலை, இரவு என ஒவ்வொரு பொழுதின் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் தான் என்பதை உணர்ந்து நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நாமும் வெற்றியாளர்களாக உருவாக வேண்டும். உங்கள் வாய்ப்புகளை வெற்றியாக மாற்றுவதற்கு வாழ்த்துகள்! நன்றி!!

Related Tags

வாய்ப்பு கிடைக்கும் போதே பயன்படுத்திக் கொள் |Tamil Moral Stories | Stories In Tamil With Moral To Read | Philosophy Story In Tamil | Positive Thoughts Story In Tamil | Motivational Story of Woman | Sirukathaigal In Tamil | Moral Stories In Tamil For College Students | Moral Stories In Tamil For School Students | Motivation Stories for Youngsters In Tamil | Kutty Motivational Story In Tamil | உன் பலம் அறிந்து செயல்படு | Latest Motivational Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook