1 Minute Motivational Story In Tamil | உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக் கொள்

உன் வாழ்க்கைக்கான வாய்ப்பைகளை நீயே உருவாக்கிக் கொள்

ஒரு அடர்ந்த காடு இருந்தது. அதனை சுற்றி அழகான குட்டி தீவு ஒன்று இருந்தது. அந்த காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் அங்கே தங்கி இருக்கும் காட்டுவாசி மக்களை அவரின் சொந்த குழந்தைகள் மாதிரி கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். ஆனால், அந்த மனிதர்க்கு வயதாகி விட்ட காரணத்தால் அவருக்கு பின் அந்த மக்களை வழிநடத்த வேற ஒரு தலைவரை நியமிக்க முடிவு செய்தார்கள். அதற்கான போட்டிகளை வைத்து இரண்டு இளைஞர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.


இரண்டு பேருமே வீரத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் இந்த இரண்டு வீரர்களில் யாரை காட்டிற்கு தலைவராக தேர்ந்தெடுப்பது என்ற ஒரு பெரிய குழப்பம் உருவாகியது. இரண்டு வீரர்களையும் நேரடியாக சண்டை போடவிட்டால் ஒருவருக்கொருவர் பயங்கரமாக அடித்து கொள்வார்கள். அந்த இருவரில் ஒருவர் கண்டிப்பாக இறந்து போகிற நிலைமை வந்துவிடும் என்று கருத்தில்க் கொண்டு வேற ஒரு முடிவு செய்தார்கள்.
மறுநாள் இரண்டு வீரர்களையும் வரவழைத்தார்கள். யார் அதை செய்கின்றார்களோ அந்த ஒருவர் தான் நாட்டின் தலைவனாக முடிசூட்டப்படுவீர்கள் என்று சொன்னார்கள். உங்கள் இரண்டு பேருக்கும் சில ஆயுதங்களும், உணவு தானியம் ஒரு மூட்டையும், சமையல் பாத்திரங்களும் கொடுக்கப்படும். உங்கள் இருவரையும் நம்முடைய காட்டிற்கு அருகில் இருக்கும் வேற வேற தீவுகளில் கொண்டு போய்விட்டு விட்டு வந்துவிடுவார்கள். உங்களிடம் இருக்கும் உணவு தானியங்களை சமைத்து சாப்பிட்டுக்கொண்டு அந்த உணவு தானியம் முடிகிற வரைக்கும் அந்தக் கட்டிற்குள்ளே தங்கி வாழ வேண்டும்.


நீங்கள் அந்த உணவு தானியங்கள் முடிந்த பிறகு மரத்திலுள்ள கிளைகளை உடைத்து கடற்கரையின் மீது தீயை மூட்ட வேண்டும். அந்த தீயினால் வரும் வெளிச்சத்தை பார்த்ததும் இங்கிருந்து படகினை அனுப்பி வைத்து உங்களை நாங்கள் மீட்டேடுப்போம். காட்டிற்கு அனுப்பிய இருவரில் யார் ஒருவர் அதிக நாட்களை தங்கி இருக்கிறார்களோ அவர் தான் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறினார் தலைவர். அந்த தலைவர் சொன்ன நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு இரண்டு வீரர்களும் தனித்தனியாக ஆளுக்கு ஒரு தீவை நோக்கி பயணத்தை தொடங்கினார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஆளுக்கு ஒரு தீவில் இறக்கிவிட்டார்கள். இரண்டு வீரர்களுமே ஆளில்லாத தீவில் தங்க ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு தீவுகளிலிருந்தும் எங்கேயாவது தீயினை மூட்டி வெளிச்சம் வருகிறதா? என்பதை பார்க்க ஒரு குழு எந்த நேரமும் அந்த இரண்டு தீவுகளை கண்காணித்தப்படியே இருந்தது. எந்த நேரமும் படகினை எடுத்துக்கொண்டு போவதற்கு ஆங்கே ஆட்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். ஆங்கேயே வேலையாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். மூன்று மாதங்கள் கடந்து விட்டது.
1 Minute Motivational Story In Tamil, உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக் கொள்
ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையில் இருந்து உடனே ஒரு படகு சென்று அங்கே எலும்பும் தோலுமாக இருந்த ஒரு இளைஞன் அழைத்துக்கொண்டு வந்தது. அப்போது அந்த இளைஞன் தலைவரைப் பார்த்து சொன்னான் எனக்கு கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டும் தான் போதுமானதாக இருந்தது. இருந்தாலும் கூட நான் என்னுடைய சாமர்த்தியத்தால் இத்தனை நாட்களுக்கு தாக்கு பிடித்திருந்தேன். அதனால் நீங்கள் எனக்கு தலைவர் பதவியை கொடுக்க வேண்டுகிறேன் என்று அந்த தலைவரைப் பார்த்து சொன்னான் அந்த வீரன்.
மற்றொரு வீரன் இன்னும் வரவே இல்லை. 4 மாதங்கள் கழித்து அவர்களுக்கு மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது. சரி நாமளே நேரில் போய் பார்த்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து அந்த தீவை நோக்கி சென்றார்கள். அந்த தீவுக்கு சென்றார்கள். அங்கே மூங்கில்களால் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது. அதிலிருந்து அவர்கள் தேடிவந்த அந்த இளைஞன் ஓடிவருகிறான். முன்பை விட நல்லாவே கொழுத்து போய் இருந்தான். இந்த நபர்களை பார்த்ததுமே மகிழ்ச்சியுடன் உள்ளே வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு போய் உள்ளே உட்கார வைத்தான்.


ஒரு சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான். இதை பார்த்து தலைவருக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அந்த இளைஞனை பார்த்து கேட்டார். உனக்கு கொடுக்கப்பட்டு இருந்த சோளம் 3 மாதத்திற்கு மட்டுமே இருந்திருக்கும். அதுவும் மூன்று மாதத்திற்குள் முடிந்து போயிருக்கும். ஆனால், நீங்களோ! எங்களுக்கு மிகவும் அருமையான சோள அடையை கொண்டு வந்து கொடுக்கிறாய். நீயும் இதுவரையிலும் நன்றாக உணவு சாப்பிட்டு நன்றாக இருக்கிறாய் இது எப்படி சாத்தியம் ஆனது? என்று அந்த வீரனை பார்த்து தலைவர் கேட்டார்.
இளைஞன் சொல்கிறான் இதனை முதலில் சாப்பிடுங்கள். உங்களுடைய எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்கிறேன் என்றான். கொஞ்ச நேரம் கழித்து அவனுடைய வீட்டுக்கு பின்னாடி இருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு போனான். அங்கு ஒரு அழகான சோளக்கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தலைவரைப் பார்த்து அந்த இளைஞன் சொன்னான். நான் வந்த அன்றைக்கே என்னுடைய தானியத்திலிருந்து ஒரு பங்கினை எடுத்து விதைத்து வைத்தேன். அது இரண்டு மாதத்திற்குள் அறுவடைக்கு தயாரானது. அதனால் நான் எத்தகைய கவலையும் இல்லாமல் நன்றாக உணவு சாப்பிட்டு வாழ்ந்து வந்தேன் என்றான்.

இந்த 4 மாதங்கள் மட்டுமில்லை, இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும் ஆனாலும் என்னால் இங்கே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தலைவரைப் பார்த்து சொன்னான் அந்த வீரன். அந்த இளைஞனை பார்த்த தலைவர் சொன்னார். உன்னுடைய அறிவாளித்தனமும், உழைப்பும் நிச்சயம் நம் மக்களை முன்னேற்ற உதவும். ஆகையால் நீதான் இந்த காட்டுக்கு தலைவன் என்று கூறினார். மிக மகிழ்ச்சியோடு அவனுடைய தோளில் தட்டிக்கொடுத்து ஊருக்கு அழைத்துக்கொண்டு சென்றார்கள். நம்முடைய வாழ்க்கையில் பொருளாக இருந்தாலும் சரி, நேரமாக இருந்தாலும் சரி கையில் கொடுக்கப்படும் போது அதனை ஆழ் மனதில் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தும் போது நாமும் ஒரு நல்ல தலைவனாக உருவாக முடியும். நன்றி!

Related Tags

உன் வாழ்க்கைக்கான வாய்ப்பைகளை நீயே உருவாக்கிக் கொள் | 1 Minute Motivational Story In Tamil | Short Motivational Story In Tamil | Positive Energy Story In Tamil | The Power of Positive Thinking | Motivational Stories In Tamil | தன்னம்பிக்கை கதைகள் | Self Confidence Story In Tamil | Motivational Story for Students In Tamil | Positive Energy Speech in Tamil | Tamil Motivational Speech | Motivational Story for Business In Tamil | Top Stories In Tamil | Useful Stories In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.



Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook